
posted 21st February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராக சாய்ந்தமருதுவைச் சேர்ந்த எம்.ஐ. நௌபல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் உதவிப் பதிவாளர், பிரதிப் பதிவாளர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் எனப் பதவி வகித்துவரும், நௌபரை பதில் பதிவாளராக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் நியமனம் செய்துள்ளார்.
நீண்ட காலமாக பல்கலைக்கழக கல்விசாரா நிருவாகத்தில் பணியாற்றிய அனுபவமிக்க பதில் பதிவாளர் நௌபருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுவரை தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளராகப் பெரும் சேவையாற்றிவந்த பதிவாளர் எம். அப்துல் சத்தார் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளமையும், அந்த வெற்றிடத்திற்கே பதில் பதிவாளராக நௌபர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)