கிளிநொச்சி மாவட்டத்திலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்திலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. ஆனால், சந்தைக்கு வெளிப்புறத்தில் கடலுணவு வர்த்தகம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நேற்று சனி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் யாழ். நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More