posted 21st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஐக்கிய காங்கிரஸ் வரவேற்கின்றது
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை "இலங்கை தமிழ் மக்கள்" என மாஏறப்பட வேண்டும் என பதிவாளர் நாயகம் கூறியிருப்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பதுடன் இலங்கை சோனகர் போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு "முஸ்லிம்கள்" என அழைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் சசிகுமார் ராமசாமி மேலும் தெரிவித்ததாவது,
இவ்வாறு இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கை தமிழர் என அழைக்கப்படுவது மலையக மக்களின் இன அடையாளத்தை அழிக்க முயல்வதாக சிலர் சொல்வது அர்த்தமற்றதாகும்.
உண்மையில் பல நாடுகளில் இருந்து வேறு நாடுகளில் குடியேறி அந்நாட்டின் பிரஜா உரிமை பெற்றோர் தாம் "இன்னநாட்டு வம்சாவளி" என்ற இன அடையாளத்தை சட்டமூலங்களில் காட்டுவதில்லை. உதாரணமாக தற்போதை பிரித்தானிய பிரதமர் இந்திய வம்சாவளியாக இருந்தும் அவர் பிரிட்டிஷ் பிரஜை என்றே அழைக்கப்படுகிறாரே தவிர இந்தியா வம்சாவளி பிரிட்டிஷ் பிரஜை என்ற இனம் என அவர் சார்ந்த டாக்குமென்டரிகளில் தெரிவிப்பதில்லை.
இன்றைய அமெரிக்கர்கள் கூட ஒரு காலத்தில் பிரித்தானியா போன்ற நாடுகளின் வம்சாவளிதான்.
இலங்கையின் சிங்கள மக்கள் கூட அடிப்படையில் இந்திய வம்சாவளிதான். ஆனாலும் அவர்கள் இந்திய வம்சாவளி சிங்களவர் என்ற அடையாளம் இடப்படுகின்றனரா?
மலையக தமிழ் மக்கள் மற்றும் சிங்களவர் மட்டுமல்ல, பெரும்பாலான முஸ்லிம், தமிழ் மக்கள், இந்திய வம்சாவளிகள்தான். இந்திய வம்சாவளி விஜயனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் மனைவிகளாக பாண்டிய நாட்டு பெண்களே வரவழைக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் மலையக மக்களை "இந்திய தமிழர்" என அழைக்கப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகவே நாம் காண்கிறோம்.
அதே போல் முஸ்லிம்களையும் மலாய முஸ்லிம்களையும் மரக்கல என்றும், இலங்கை சோனகர் என்றும், மலேயர் என்றும் அழைக்கப்படுவதும் இக்காலத்துக்கு பொருத்தமற்றது என்பதுடன் இவை தவிர்க்கப்பட்டு அவர்கள் அனைவரையும் "முஸ்லிம்கள்" என்று மட்டுமே அடையாளப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஐக்கிய காங்கிரசின் கோரிக்கை என்பதுடன் இதற்குரிய நடவடிக்கைகளை சிறுபான்மை எம்பீக்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.
ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)