
posted 2nd February 2022
கோசங்களும் உணர்ச்சிவச பேச்சுக்களும் தனிப்பட்ட கட்சி நலன்களுக்கும் தனிமனித அடையாளங்களுக்கும் பயன்படுமே தவிர இனத்தின் அபிலாசைகளை வென்றிட தந்திரோபாய வழிகாட்டுதல்களுக்கு தடையாகவே அமையும் தமிழர் வரலாற்றில் உணர்ச்சி அரசியல் என்பது தற்போதைய சூழலில் அவசியமற்றது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தனது ஊடகச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;
தமிழர் வரலாற்றில் உணர்ச்சி அரசியல் என்பது தற்போதைய சூழலில் அவசியமற்றது காரணம் கடந்தகால தமிழர் அரசியல் உணர்ச்சி வச பேச்சுக்களாலும் கோசங்களாலும் கட்டி எழுப்பப்பட்டதை மிதவாத அரசியலும் விடுதலைப் போராட்ட அரசியலும் வரலாறாய் பதிவு செய்துள்ளன. அவற்றின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நிதானமான தந்திரோபாய அரசியலே தற்போதைய உலக நீரோட்டத்தில் நகர்வுகளுக்கு ஏற்ப ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது .
கோசங்களும், உணர்ச்சிவச பேச்சுக்களும் தனிப்பட்ட கட்சி நலன்களுக்கும், தனிமனித அடையாளங்களுக்கும் பயன்படுமே தவிர இனத்தின் அபிலாசைகளை வென்றிட தந்திரோபாய வழிகாட்டுதல்களுக்கு தடையாகவே அமையும். மாறாக இனவாத பூதத்தை வளர்க்கவும் பௌத்த சிங்கள பேரினவாதம் விரிவடைவதற்கான தீனியாகவும், தமிழ் இனத்தை பெரும் தேசியவாதம் தொடர்ந்து அழிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் வாழ்விட பூகோள அமைவிற்கு பிராந்திய வல்லரசின் அரசியலைத் தாண்டி பூகோள அரசியல் எதனையும் பெற்றுத் தர மாட்டாது. இது 1833 ஆண்டில் இருந்து இன்றுவரை வரலாறு சொல்லும் உண்மை.
விடுதலைப் போராட்ட இயக்கம் ஆயுத பலத்துடன் இருந்த போதும், பிராந்திய சக்தியை எடுத்தெறிந்து விமர்சித்தது இல்லை. மாறாக எந்தவித பலம் குறைந்த மக்கள் ஆதரவை கொண்ட ஒரு கட்சித் தரப்பு எல்லை தாண்டி விமர்சித்தல் தந்திரோபாய நகர்வுகளுக்கு குந்தகம் விழைவிப்பதாகவே அமையும்.
ஆகவே பூகோள அரசியல் கடந்த காலத்தில் தமிழர் தரப்பை பயன்படுத்தி தங்களின் நலன்களை பூர்த்தி செய்ததுடன் தமிழர்களின் அபிலாசைகளை வெல்வதற்கான வழிகளையும் இல்லாது செய்தன.
உதாரணமாக ஆரம்பத்தில் தமிழர்களை விட ளு று சு னு எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அவர்களே சமஷ்ரி தொடர்பாக முதலில் தீவிரமாக பேசினார். குறிப்பாக வடகிழக்கு, கண்டி, கரையோரம், என மூன்று அலகுகளாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பிரசாரம் செய்தார்.
ஆனால், அப்போது இருந்த பிரித்தானிய ஆளுநர் டொனமூர் இந்தியாவை இலகுவாக கையாள்வதற்காக கண்டி மற்றும் கரையோரச் சிங்களவர்களை ஒன்றாக இணைத்து அவர்களிடமே ஆளும் அதிகாரங்களை வழங்கினார். வேறு பல உதாரணங்களையும் கூற முடியும்.
ஆகவே ஈழத் தமிழர்கள், பிராந்திய அரசியலை தந்திரோபாயமாக கையாள தவறினால், எதிர்காலத்தில் ஆபிரிக்க கண்டத்தில் பல தேசிய இனங்கள் ஆக்கிரமிப்பில் கரைந்து சென்றது போல, ஈழத்திலும் அவ்வாறான அவலம் ஏற்படும் அபாயம் உள்ளது என இவ்வாறு வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House