
posted 15th February 2022
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக இவ் அமைப்பின் தலைவர் வீ.எஸ். சிவகரனுக்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு ஆஐராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இயங்கி வரும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் தலைவர் வீ.எஸ். சிவகரனை எதிர்வரும் 18.02.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரிவு 01 இன் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு திங்கள் கிழமை (14.02.2022) பிற்பகல் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேரடியாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு வருகை தரும்போது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க அமைப்பின் சம்பந்தமான வாக்கு மூலம் ஒன்றைத் தருவதற்கு இந் நிறுவனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வரும்படியும் அவர் பணிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House