வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்படத் தொடங்கிய வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை திரை நீக்கம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு. திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ்மொழியிலான கல்வெட்டு பிரதான பாதையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று இரவு அவசர கதியில் அதில் மாற்றம் செய்யப்பட்டு, பிரதான வாயிலை நோக்கிச் சிங்கள மொழியிலான கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டே சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House