
posted 17th February 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று விியாழக்கிழமை முற்பகல் 10.00மணியளவில் முன்னெடுத்தனர்.
தங்களுக்கு மாதம் வெறுமனே ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாவதாக கவலை வெளியிட்டனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தும் இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதிருப்பதால் மாவட்டங்களில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
போராட்ட முடிவில் தங்களது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் கையளித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களின் ஆதங்கங்களை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த கோரிக்கைகள் உரிய நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சுக்கு முறைப்படி அனுப்பிவைக்கப்படுமென தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House