மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் காற்றாலை மின் உற்பத்திக்கான வேலை யினை எதிர்த்து

அன்மையில் ஜனாதிபதி அவர்கள் மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின் மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்தை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையாக மக்களுக்கு விழப்புணர்வை மேற்கொள்ளும்படி விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இது தொடர்பாக கொழும்பிலிருந்து ஒரு உயர்மட்ட குழு மன்னாருக்கு வருகை தந்து முக்கிய அமைப்பினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் 70 வீதமான மின் உற்பத்தியானது சூரியசக்தி காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்திகளினூடாக மின்சாரத்தை பெற வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டமாக இருப்பதனால் இதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மன்னாரில் 36 மின் காற்றாலைகள் அமைக்கப்பட்டு தற்பொழுது அவைகள் இயங்கி வருகின்ற வேளையில் இதனால் மன்னார் தீவு பகுதியிலுள்ள மீனவர்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக மீனவ சமூகத்தால் சுட்டிக்காட்டப்பட்டு வருவதால் இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருந்தது

அத்துடன் தற்பொழுது தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இரண்டாம் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை எதிர்த்து மன்னார் மக்களின் வேண்டுகோலையடுத்து அன்மையில் மன்னார் பிரஜைகள் குழு தலைமையில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளையில் ஜனாதிபதி கடந்த 2 ந் திகதி (02.02.2022) மன்னார் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னாரில் இயங்கிவரும் மின் உற்பத்தி காற்றாலையை பார்வையிட்டு சென்றிருந்தார்.

இதைத் தொடர்ந்து மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்திக்கான உடன் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளுடன் இது தொடர்பாக இப் பகுதி மக்களுக்கு விழப்புணர்வை மேற்கொள்ளும்படியும் வேண்டியுள்ளார்.

இதன் காரணமாக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் மன்னாருக்கு எதிர்வரும் 12 ந் திகதி (12.02.2022) ஒரு உயர்மட்டக்குழு விஜயத்தை மேற்கொண்டு இரு நாட்கள் மன்னாரில் தங்கியிருந்து மன்னாரிலுள்ள முக்கிய குழுவினரை சந்தித்து விழிப்புணர்வுகான முன்னெடுப்பு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய 12.02.2022 சனிக்கிழமை காலை 11 மணிக்கு மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரை சந்திக்க இருக்கின்றது

இதே தினம் இரண்டாவது கூட்டம் மாலை 4 மணிக்கு மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் மன்னார் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள கேட்போர் கூடத்திலும்

பின் அடுத்த தினம் (13.02.2022) ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் நகரின் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பனம் பொருள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இச் சந்திப்பு இடம்பெற இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் காற்றாலை மின் உற்பத்திக்கான வேலை யினை எதிர்த்து

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House