
posted 5th February 2022
“சக தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை குழப்பியுள்ளன. மக்களின் பிரச்னைகளை தீர்க்கக்கூடாது என்பதே அவர்களின் உள்நோக்கம். இந்த விடயத்தைப் புரிந்து கொண்ட வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எனது வாக்குறுதியை அடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டனர்”, என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை தேசிய மீனவர் சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற மீனவர் சம்மேளனத்தின் கலந்துரையாடலில், சம்மேளனத்தின் எதிர்கால செயல்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும், கடற்றொழில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House