
posted 6th February 2022
அடாத்தாக அமைக்கப்படும் கட்டுவன் - மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் நேரில் பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பாதையில் 400 மீற்றர் பாதையை அபகரித்துள்ள படையினர் வீதியை விட மறுத்து தனியாருக்கு சொந்தமான நிலத்தின் ஊடாக தற்போது பாதை அமைக்கும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டதோடு சட்டப்படி சுவீகரிக்காது நில உரிமையாளரின் சம்மதம் இன்றி அவர்களின் கிணறுகளை இடித்து அழித்து அதன் மேல் புதிய வீதிகளை அமைப்பதையும் பார்வையிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரோடு நில உரிமையாளர்கள், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன், உறுப்பினர் ஹரிகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House