
posted 21st February 2022
நிந்தவூர் பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளின் மீண்டும் ஒரு மைல் கல்லாக பாலர் பாடசாலை கட்டிடமொன்று நாளை திறந்து வைக்கப்படவிருக்கின்றது.
பல வருட காலமாக நிந்தவூர் நெல்லித்தீவு பிரதேசத்தில் இயங்கிவரும் அல்-ஹிக்மா பாலர் பாடசாலைக்கு நிரந்தரக் கட்டிடமொன்று இல்லாத பெரும் குறை நீடித்து வந்தது.
இதனை நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து பல்வேறு வசதிகளுடனும் நிரந்த கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து இப்பாலர் பாடசாலைக்கு வழங்குவதற்கு அவர் ஆவன செய்தார்.
இதன் பயனாக புதிய பாலர் பாடசாலைக் கட்டிடம் நிந்தவூர் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு நாளை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவிருக்கின்றது.
பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த பாலர் பாடசாலை கட்டிட திறப்பு விழாவில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி, நிந்தவூர் பிரதேச செயலாளர், சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப், நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.எம்.பி.பாரூக் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன புதிய நிரந்தர பாலர் பாடசாலை கட்டிடத்தை வைபர ரீதியாக இதன்போது திறந்து வைப்பார்.
தமது நீண்டகால கோரிக்கையை ஏற்று நிறைவேற்றியுள்ள பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நெல்லித்தீவு பிரதேச மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House