நாளாந்தம் 3500 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறும் கூலித்தொழிலாளர்

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவுகளில் பெரும்போக நெற்செய்கையின் அறுவடை வேலைகள் துரிதமாக இடம்பெற்றுவரும் நிலையில் கூலித்தொழிலாளர்களுக்குப் பெரும் கிராக்கியும், மவுசும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அறுவடை செய்யப்படும் நெல்லை வெளிகளில் பரவி உலர்த்தி சேமிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதாலும், ஒரே நேரத்தில் பல இடங்களிலும் அறுவடை நடைபெறுவதாலும் அறுவடை நெல்லை உலர்த்தும் நடவடிக்கைக்கென பெருமளவில் கூலித்தொழிலாளர்களின் தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூலித் தெழிலாளர்களுக்கு அன்றாட தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், நாளாந்த வருமானமும் கிடைத்து வருகின்றது.
அதே வேளை மேற்படி அறுவடை நெல்லை வெய்யிலில் உலரவிட்டு மீளவும் பொதியிடும் வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களுக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த அறுவடை நெல்லை உடனுக்குடன் உலர்த்தும் வேலைகளில் கூலித்தொழிலாளர்கள் கூட்டாகவும், தனியாகவும் ஈடுபட்டுவரும் நிலையில் இதன் மூலம் தனி ஒரு தொழிலாளி நளாந்தம் 3500 ரூபாவுக்கு மேல் வருமானம் பெற்றுவருவதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் அயல் மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் பெருந்தொகையான கூலித்தொழிலாளர்கள் இந்த வருமான வாய்ப்பை எதிர்பார்த்து அம்பாறை மாவட்டத்திற்குப் படையெடுத்த வண்ணமுள்ளனர்.

நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் தற்சமயம் நாளாந்த இத்தொழில் வாய்ப்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாளாந்தம் 3500 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறும் கூலித்தொழிலாளர்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House