
posted 3rd February 2022
மன்னார் பிரஜைகள் குழு மன்னார் பெரும்நிலப்பரப்பு நானாட்டான் பகுதிக்கு நேரடியாக விஐயம் செய்து அங்கு இடம்பெறும் மணல் அகழ்வுகளை பார்வையிட்டு பாதிப்பு அடையும் இடங்களில் மணல் அகழ்வு செய்வதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஆதரவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
பெரும்நிலப்பரப்பில் நான்கு இடங்களில் இம் மணல் அகழ்விற்கு நீதிமன்றம் தடையுத்தரவு போடப்பட்டிருந்தும், கடல் நீர் உட்புகும் நிலை ஏற்பட்டிருந்தும், குடிநீர் மாசுபடும் நிலையிருந்தும் மணல் அகழ்வுவதற்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதனால் பிரஜைகள் குழுவினால் தான் இச்செய்கையினை நிறுத்த முடியும்.
மேலும், மணல் அகழ்வு நானாட்டான் பிரதேச பகுதியில் மட்டுமல்ல, மடு பிரதேசப் பிரிவிலும் நடைபெறுகின்றது என தவிசாளர் சுட்டிக் காட்டினார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House