
posted 4th February 2022
து சுதந்திர தின விழா நாடளாவிய ரீதியில் வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.
பிரதான நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடனும் ஜனாதிபதி பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதல்களுடனும் நடைபெற்றது.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் அரச திணைக்களங்கள் பலவற்றிலும் சுதந்திரதின விழா நிகழ்வுகள் வெகு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றன.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலும், தமிழ் பிரதேச அரச அலுவலகங்கள் திணைக்களங்கள் பலவற்றிலும் இந்த சுதந்திரதின விழா நிகழ்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக இந்த மாவட்டத்தின் முஸ்லிம் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் என்பவற்றிலும் சுதந்திரதின நிகழ்வுகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றன.
நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசல், மஃதுல் ஹக் அல் குர்ஆன் மணன கலாபீடம் இணைந்தும், நிந்தவூர் கத்தீப் பேஸ் இமாம் சம்மேளன சமூக சேவை அமைப்பு றஹ்மான் பள்ளிவாசலுடன் இணைந்து சுதந்திர தின நிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் நடாத்தின.
இந்த நிகழ்வுகளில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரும் சமூகத் தொடர்பாடல் பிரிவுப் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம்.சதாத், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லதீப் தலைமையிலும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வுகளையொட்டி மர நடுகை சிரமதானம் விசேட துஆ பிரார்த்தனை சுதந்திர தினம் பற்றிய சொற்பொழிவுகள் என்பனவும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House