
posted 20th February 2022
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள் 20இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது.
இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு புகுந்த காட்டுயானைகள் 20இற்கும் மேற்பட்ட பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தி உள்ளன.
இந்தப் பிரதேசத்தை யானைகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் வேலிகளை அமைத்து தங்களுடைய பயிர்களைப் பாதுகாத்து தரவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ள அதேநேரம், தற்போது இந்த யானைகளால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்பீடுகளை பெற்று தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House