
posted 5th February 2022
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக உள்ள வயலில் சனிக்கிழமை (05) பிற்பகல் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கரவெட்டி, கீரிப்பள்ளியைச் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள நெல் வயலில் சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போதே திடீரென்று மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House