கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (04.02.2022)

இலங்கையில் கொரொனா மரணம் அப்டேற் (04.02.2022)

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதன்படி, 30 -59 வயது பிரிவில் 3 ஆண்கள் ஒரு பெண் அடங்கலாக நாவல்வரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 ஆண்கள், 11 பெண்கள் உட்பட 25 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்தனர்.

இந்த மரணங்களின் எண்ணிக்கையுடன் நாடு முழுவதும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 544ஆக உயர்ந்துள்ளது.

யாழ். போதனா ஆய்வுகூட அறிக்கை

யாழ். ஆய்வு கூடங்களில் இன்று வெள்ளிக்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் யாழ். போதனா வைத்தியசாலையில் பெண்கள் 10 பேர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்டிருந்த 62 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஐவர் உட்பட இவ்வாறு 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ். போதனா ஆய்வுகூடத்தில் (பெப்-04) யாழ். போதனாவில் இருந்து பெறப்பட்டிருந்த 70 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஐவர் உட்பட இவ்வாறு 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இன்றைய தினம் யாழ். போதனாவில் இருந்து பெறப்பட்டிருந்த 132 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பெண்கள் 10 பேர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (04.02.2022)

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House