
posted 7th February 2022

பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்டினால் எழுதப்பட்ட "என் சுவாசமே" எனும் சுகாதார மேம்பாட்டு ஏடு வெளியீட்டு வைக்கப்பட்டது.
பருத்தித்துறை கிராமக் கோட்டுச் சந்தியில் உள்ள எஸ். எஸ். கொம்ளக்ஸ் மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 3.30 மணியளவில் இவ் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பிருந்திகா செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக வடக்குமாகண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். சிறப்பு அதிதியாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி ஜீ. செந்தூரன், கௌரவ அதிதியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வங்கி முகாமையாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், அரச அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House