உரும்பிராய் சந்தியில் இடம்பெறும் விபத்துகள்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு இளைஞர்களும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் அடுத்தடுத்து இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பலாலி வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும், மருதனார்மட பக்கமிருந்து சென்ற கடற்படை வாகனமும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரண்டு இளைஞர்களும் காயமடைந்தனர்.

விபத்தையடுத்து, உரும்பிராய் சந்தியில் கடமையிலிருந்த இராணுவச்சிப்பாய் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, பின்னால் வந்த கார் ஒன்று சிப்பாயை மோதித்தள்ளியது. இதில் சிப்பாயின் கால் முறிந்தது.

காயமடைந்த 3 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் சந்தியில் இடம்பெறும் விபத்துகள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House