
posted 16th February 2022
மன்னார் மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் கொவிட் தொற்றாளர்களின் தொகை தற்பொழுது 566 ஆக உயர்ந்துள்ளது. என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 15 ந் திகதி (15.02.2022) 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் எருக்கலம்பிட்டி வைத்தியசாலையில் 4 பேரும், முருங்கன் வைத்தியசாலையில் 3 நபர்களும், மன்னார் பொது வைத்தியசாலையில் 2 பேரும் வங்காலை மற்றும் சிலாவத்துறை ஆகிய வைத்திசாலைகளில் தலா ஒருவரும் மொத்தம் 11 பேருக்கே கொவிட் தொற்று இந்நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றுடன் 2022 ஆம் ஆண்டில் இம் மாதம் (பெப்ரவரி) மொத்தமாக 566 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 3749 பேர் கொவிற் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அத்துடன் கொவிட் தொற்றாளர்களின் மரணம் 39 ஆகவும் இம் மாவட்டத்தில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House