
posted 20th February 2022
இலங்கையில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,969 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 634,333 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். ஆய்வு கூடங்களில் 19.02.2022 தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசேதனையில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 19 பேருக்கும் (9 வயது சிறுமி உட்பட), மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 03 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House