இரு குழுக்களிடையில் மோதல்

ஈ. பி. டி. பியின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனுடன் வந்த குழுவினருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியானது.

வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குளுக்களுக்கிடையே தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுவந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் மாலை குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர். இதனையடுத்து அந்தப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தனது சகாக்களுடன் சென்றிருந்தார். இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.

இதேவேளை, சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்திருந்த சகாக்களை தாக்கத்தொடங்கினர், அவர்களும் திரும்பித் தாக்கினர்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்ப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்றுநேரம் பதற்றநிலை ஏற்ப்பட்டது.

சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றார். எனினும், அவரின் சகாக்களை துரத்திச்சென்ற மற்றைய குழு மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்துக்குள் உட்புகுந்தும் தாக்க முற்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரு குழுக்களிடையில் மோதல்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House