இரத்ததான முகாம்

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆபள்ளிவாசல் சமூக சேவைப்பிரிவு வருடாந்தம் நடத்டதிவரும் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை பொது மக்கள், இளைஞர்களின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்றது.
12 ஆவது வருடமாக இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் ஆண், பெண் இருபாலாரும் குருதிக் கொடை வழங்கினர்.

ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆபள்ளிவாசல் தலைவர், மௌலவி எம்.எச்.எம்.இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்பி) தலைமையில், மேற்படி பள்ளிவாசலில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மேலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிக்கு முகாமில் பெறப்ப்ட்ட இரத்தம் வழங்கப்பட்டதுடன், சுமார் 200 பேர் வரை இரத்ததானம் வழங்கியதாகவும், தலைவர் மௌலவி இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்பி) தெரிவித்தார்.

இதேவேளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அனுசரணையுடன், இரத்ததான முகாமுடன் இணைந்ததாக தொற்றா நோய்கள் தொடர்பிலான இலவச பரிசோதனைகளும் இடம்பெற்றமையும் குறிப்பிட்டதக்கது.

ஒவ்வொரு வருடமும், இத்தகைய இரத்ததான முகாமை தமது பள்ளிவாசல் சமூக சேவைப் பிரிவு நடத்திவருவதாகவும் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் எனபெருமளவானோர் இரத்ததானம் வழங்கி வருவதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இரத்ததான முகாம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House