
posted 1st February 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தை முழுமையாக முடக்கிப் போராடுவதற்கு மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் அழைப்பின் பிரகாரம், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பிரதான வீதிகளை முடக்கும் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீனவர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House