
posted 11th February 2022
இலங்கையின் நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை அறுவடை ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாவட்டத்தில் இம்முறை பெரும் போகத்தில் சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் நெற் காணிகளில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்சமயம் மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவுகளான அக்கரைப்பற்று, நிந்தவூர் அட்டாளைச்சேனை, சம்மாந்துறை குடுவில், 8 ஆம் கட்டை, ஒலுவில், பாலமுனை உட்பட மேலும் சில பகுதிகளிலும் நெல் அறுவடைமும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை அரசியின் இரசாயனப் பசளைத் தடையும், சேதனப் பசளை பாவனைத்திட்டமும் காரணமாக இம்முறை விவசாயிகளின் நெல் விளைச்சலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசு திடுதிப்பென இப்பெரும் போகத்தின் போது இரசாயனப் பசளை இறக்குமதியை நிறுத்தி சேதனப் பசளை திட்டத்தைக் கட்டாயப்படுத்தியதாலேயே இப்பரிதாப நிலமை ஏற்பட்டுள்ளது.
சேமித்து வைத்திருந்த இரசாயனப் பசளையை பாவித்து செய்கை பண்ணியவர்கள் முதலையாவது காப்பாற்றக் கூடிய விளைச்சலைப் பெற்றுவருவதாகவும்,
சேதனப் பசளையைப் பாவித்த விவசாயிகளுக்கு விளைச்சலில் பெரும் வீழ்ச்சியுடன், நஷ்டத்தையே எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் 66 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் 5500 ரூபா வரை உயர்வடைந்துமுள்ளது.
இதேவேளை அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லை உலரவைத்து சேமிப்பதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதனால் தற்சமயம் பிரதான வீதிகளின் மருங்குகளுட்பட, உள்ளுர் வீதிகளிலும் அறுவடை நெல்லை பரப்பி உலரவைப்பதிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House