
posted 8th February 2022
வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த தேவசிகாமணி விவேகானந்தன் (வயது-81) என்பவராவார். மேற்படி முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House