
posted 25th February 2022
மன்னாரில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட விலைமதிப்புள்ள பேராமைகளை பிடித்து வீடு ஒன்றில் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மன்னார் பொலிசார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் வியாழக்கிழமை (24.02.2022) இடம்பெற்றுள்ளது.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் அத்தியடசகர் துல்ஷன் நாகவத்தையின் பணிப்புரைக்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர் பிரபாத் விதானக்கவின் கண்காணிப்பில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பல்லேவல தலைமை கொண்ட குழுவினர் மன்னார் எழுத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது 5 கடல் ஆமைகள் கைப்பற்றப்பட்டன.
வீட்டின் குளியறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இப் பேராமைகள் ஒவ்வொன்றும் தலா 100 கிலோ எடை கொண்டதாகவும் இவைகள் விலை மதிப்புள்ள அரிய வகை கொண்ட ஆமைகள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ் ஆமைகள் தொடர்பாக பொலிசார் விசாரனையை மேற்கொண்டபின் மன்னார் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு அவைகளை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House