21 இந்திய மீனவர்ககள் மீண்டும் விளக்கமறியலில்

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மறுநாள் முதலாம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு திங்கட்கிழமை (07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை மீண்டும் இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் 21 பேரையும் மீண்டும் இம்மாதம் 21 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதற்கு அவர்களிடம் வாக்குமூலம் பெறவதற்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டது.

மேலும் அவர்களின் வள்ளங்களில் இருந்து மீட்கப்பட்டு பதப்படுத்திய நிலையில் உள்ள சுமார் 100 கிலோ கிராம் மீனை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்த மன்று விற்பனை செய்யும் பணத்தினை நீதிமன்றத்தில் செலுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.

21 இந்திய மீனவர்ககள் மீண்டும் விளக்கமறியலில்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House