125 கால் சாராயப் போத்தல்களுடன் 64 வயது நபர் கைது

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமி பகுதியில் 125 கால் சாராயப் போத்தல்களுடன் 64 வயதுடைய ஒருவர் வியாழக்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறித்த நபர் வீட்டில் வைத்து சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது சித்தங்கேணி மதுவரி நிலையத்தினரின் கண்காணிப்பின் கீழ் உள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

125 கால் சாராயப் போத்தல்களுடன் 64 வயது நபர் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House