வாக்காளர் பதிவு

நாடளாவிய ரீதியில் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

நாட்டின் தேர்தல் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக வாக்காளர் இடாப்பில் புதிதாகப் பதிவு செய்யப்பட தகுதி பெற்றவர்கள் பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு வாக்காளர் பதிவை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

“உங்கள் வாக்கு நாட்டின் எதிர்காலம்” எனும் தலைப்பில், உங்கள் வாக்குரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தவறாமல் வாக்காளர் ஒருவராகப் பதிவு செய்து கொள்ளுங்கள் என தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல் பதாதைகள் பிரதேச செயலகங்கள் தோறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடத்தப்படலாமென அரசியல் வட்டாரங்களில் ஹேஸ்யங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் ஒருவருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலே நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில்,
நீண்ட காலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறும் அரசுக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்த வேண்டுமென அரசை வலியுறுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் பதிவு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House