
posted 2nd February 2022
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை அவர் மன்னார் மாவட்டத்தின் தலை மன்னார், சவுத்பார், சாந்திபுரம், பெட்டா, பள்ளிமுனை, உப்புக்குழம் மற்றும் நூர் வீதி ஆகிய பகுதிகளுக்கு அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
குறித்த பிரதேசங்களின் பொது மக்களை நீண்ட இடைவெளிக்குப் பின் நேரில் மக்களைச் சந்தித்து அவர் அளவளாவியதுடன் மக்களின் நிலைப்பாடு பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்த போது தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்தமைக்கு மக்களுக்கு அவர் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
விடுதலை பெற்று வந்துள்ள தமது நேசத்திற்குறிய தலைவரை, மக்கள் பிரதி நிதியை சென்ற இடமெல்லாம் மக்கள் உணர்வுபொங்க வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
தமது அநியாய தடுப்புக்காவலிலிருந்து விடுதலையான பின்னர் அன்மைக்காலமாக வடகிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் தலைவர் றிஷாட் பதியுதீன் தமது ஆதரவாளர்களையும் பொது மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House