
posted 11th February 2022
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குவதும், படகுகளை முட்டிமோதி மூழ்கடிப்பதும், மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், படகுகளை சிறைபிடித்து அரசுடைமையாக்கி அவற்றை ஏலம்விடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று படகுகளையும் 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல்களுக்கு மத்திய மாநில அரசுகள் கண்டனம் தெரிவிப்பதோடு சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் மீனவர்களையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருடன் திரண்டுவந்து இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்த மீனவர்கள் ரயில்நிலையத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்காததால் ரயில்நிலைய வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மீனவர்களிடம் பேசி சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House