யாழ். செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (02) மீனவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவே இந்தப் போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய முன் தினம் மாவட்ட செயலகத்தில் மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே முற்றுகைப் போராட்டம் இடம்பெற்றது.

காலை 7 மணிமுதல் மதியம் வரை இடம்பெற்ற இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருதற்காக காலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு சென்ற போதும், “அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும்” என்று எழுத்துமூல உறுதி தருமாறு மீனவர்களின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்தார்.

இதைத் தொடர்ந்து அவர் வெளியேறிய நிலையில், மதியம் வரை போராட்டம் தொடர்ந்தது.

யாழ். செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House