
posted 4th February 2022
இலங்கையின் 74 வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வானது மன்னார் நகர் நாற் சந்தியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சர்வமத தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
இதைத் தொடர்ந்து சமாதானா புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இன நல்லிணக்க நடனம் இடம்பெற்றதுடன் பின் அரச அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் சுதந்திர செய்தி வழங்கினார்
மாவட்ட செயலக வளாகத்துக்குள் சுதந்திர தின ஞாபகர்த்தமாக மர நடுகைகளும் இடம்பெற்றன
இவ் நிகழ்வில் காவல் துறை மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House