
posted 25th February 2022
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக முன்னெடுத்துவரும் கையெழுத்துப் போராட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது.
பயங்கரவார தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தி இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கையின் தலைநகர் உட்பட வடக்கு, கிழக்கின் முக்கிய பல நகரங்களிலும், பிரதேசங்களிலும் இப்போராட்டம் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் முக்கிய மாநகரமான மட்டக்களப்பில் காந்தி சதுக்கத்தில் எதிர்வுரும் ஞாயிற்றுக்கிழமை இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெறவிருக்கின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ. திவாகரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த கையெழுத்துப் போராட்டத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன், கோ. கருணாகரன், த. கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன் உட்பட கூட்டமைப்பு முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House