
posted 11th February 2022
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதி நபர் ஒருவர் போதை பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலப்படுத்தியதைத் தொடர்ந்து அந் நபர் தண்டப்பணத்துடன் சீர்திருத்த கட்டளைக்கும் உள்ளாகியுள்ளார்.
எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 800 மில்லிக்கிராம் கரோயின் போதைப் பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புதன்கிழமை (09) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பி. சிவகுமார் முன்னிலையில் பொலிசாரால் ஆஐர்படுத்தப்பட்டார்.
இச் சந்தேக நபர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இக் குற்றவாளிக்கு நீதவான் 9000 ரூபா தண்டப் பணம் விதித்ததுடன் 50 மணித்தியாலம் சீர்திருத்த கட்டளைக்கும் கட்டளையிட்டார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House