
posted 17th February 2022
விசுவமடு மத்திய சனசமூக நிலையமும் விசுவமடு விஞ்ஞானக் கல்வி நிலையமும் இணைந்து நடத்திய நிலாமுற்றம் - கலை விழா நிகழ்வு கடந்த புதன்கிழமை மாலை விசுவமடு மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் வே. பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் மருத்துவர் மா. ஜெயராசாவும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் ச. லலீசனும் கௌரவ விருந்தினராக கவிஞர் மாணிக்கம் ஜெகனும் கலந்துகொண்டனர்.
விசுவமடு விஞ்ஞான கல்வி நிலையத்தின் நிர்வாகி பொறியியலாளர் பொ. கெங்கேஸ்வரன் தொடக்க உரையாற்றினார்.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் நிலா முற்றம் - கலை ஆற்றுகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House