
posted 2nd February 2022
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முகமாலை பகுதியில் முன்எடுக்கப்பட்டுவரும் மிதிவெடி - கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடினர்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை - அல்லிப்பளை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி மிதிவெடி - கண்ணிவெடி அகற்றும் பணிகளை இன்று புதன்கிழமை அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அத்துடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற தாமதங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பிலும் கேட்டு அறிந்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House