தொடரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த கையெடுத்து வேட்டை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த கையெழுத்துப் போராட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன் ஆகியோரும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.

தொடரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House