
posted 21st February 2022
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளரும். அதிபருமான செல்லையா பேரின்பராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வு நிலை அதிபருமான ஆ. தட்சணாமூர்த்தி தலைமையில்19.02. 2022 பிற்பகல் இடம்பெற்ற வாசகர் வட்ட வருடாந்த பொதுக் கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் க. சரவணமுத்து சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பதவி வழி செயலாளராக நூலகர் எஸ். எம். ஆர். அமினுத்தீன் தெரிவானார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House