
posted 23rd February 2022
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான சிங்கரெத்தினம் குணபாலன் (வயது- 52) தனது வீட்டு அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சண்டை பிடித்ததாகவும், அதனால் அவரது மனைவி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று வீட்டுக்குச் சென்று கதவினைத் திறந்தபோது தனது கணவர் தனக்குத் தானே தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும், அயலவர்களின் உதவியோடு தூக்கிலிருந்து மீட்டெடுத்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வானின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House