சுவதம் கலைஞர் விருது

இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கலைஞர்களுக்கு வருடாந்தம் வழங்கிவரும் சுவதம் விருது 2021 இற்கான நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் விமரிசையாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். றிம்சானின் ஒருங்கிணைப்புடனும், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் தலைமையிலும், அக்கரைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில், இந்த சுவதம் கலைஞர் விருது வழங்கும் நிழ்வு நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி மூலமான 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் இதற்கென கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

வழக்கமாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் தலா பத்து கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வந்த போதிலும், கொவிட் பரவல் நிலமை காரணமாக இம்முறை (2021இற்கான) ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் தலா ஆறுகலைஞர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு மேற்படி நிகழ்வில் “சுவதம்” கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவம் பெற்றவர்களுக்கு நினைவுச்சின்னம், நற்சான்றிதழ், கலாச்சார அலுவலகள் திணைக்களத்தின் பெயர் பொறிக்கப்பட்ட லெப்டொப் பேக் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அன்னாரை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சுவதம் கலைஞர் விருது

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House