
posted 18th February 2022
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி நிவாரண உதவி பெறும் பயனாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசின் சுபீட்சத்தின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த அதிகரிக்கப்பட்;ட சமுர்த்தி நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி இதுவரை மாதாந்தம் 3500 ரூபா நிவாரண உதவி பெறுவோருக்கு 4500 ரூபாவும், 2500 ரூபா பெறுவோருக்கு 3500 ரூபாவும், 1500 ரூபாபெறுவோருக்கு 1900 ரூபாவும் அதிகரித்த சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றன.
அரசின் குறித்த சுபீட்சத்தின் தொலை நோக்கு வேலைத்தித்திட்டத்திற்கு அமைய 2022 பெப்ரவரி (இம்மாதம்) முதல் அதிகரித்த கொடுப்பனவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், சம்மாந்துறை ஹுதா (Hutha) சமுர்த்தி வங்கியில், குறித்த அதிகரித்த சமுர்த்தி நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு, வங்கி முகாமையாளர் எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், மாவட்ட சமுர்த்தி கண்காணிப்பு உத்தியோகத்தர்களான ஏ.ஜே.எம். ஹனிபா, எம்.ரி. நஸார் கணக்காளர் ஐ.எம். பாரிஸ், தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம். சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அரசின் சிறந்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் பயனாக இக்காலகட்டத்தில் சமுர்த்தி நிவாரண உதவி அதிகரித்து வழங்கப்படுவது குறித்து பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அரசுக்குப் பெரு நன்றியும் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House