
posted 23rd February 2022
மன்னார் மாவட்டத்தில் 21 ந் திகதி (21.02.2022) 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பெப்ரவரி மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 21.02.2022 திங்கள் கிழமை 20 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முருங்கன் வைத்தியசாலையில் 6 பேருக்கும், மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் நானாட்டான் வைத்தியசாலை ஆகியவற்றில் தலா 5 பேருக்கும் எருக்கலம்பிட்டி வைத்தியசாலையில் 2 பேருக்கும் பேசாலை சிலாபத்துறை ஆகிய வைத்திசாலைகளில் தலா ஒருவருமாக மொத்தம் 20 பேரே இவ் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரைக்கும் இவ் மாதம் பெப்ரவரியில் 474 பேர் கொவிட் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் வருடம் (2022) 675 பேர் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் பூஸ்டர் தடுப்பூசி 31646 பேருக்கு மன்னார் மாவட்டத்தில் போடப்பட்டுள்ளதாகவும் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House