
posted 10th February 2022
கொரோனா நோயாளிகளின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைப்பு
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்கத் தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதல் ஐந்து நாட்களே தொற்று கடுமையானதாக இருக்கும், அடுத்து வரும் இரண்டு நாட்கள் சாதாரணமாக இருப்பதுடன், அதன் பின் அவர்கள் வேலைக்கு செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னர் தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உயிரிழந்த கோவிட் நோயாளிகள்
இலங்கையில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 - 59 வயதுப் பிரிவில் 2 ஆண்களும், 3 பெண்களுமாக 5 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 ஆண்களும் 12 பெண்களுமாக 26 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 723 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உறுதிசெய்யப்பட்ட கோவிட் நோயாளிகள்*
யாழ்ப்பாணத்தின் ஆய்வுகூடங்களில் இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று வியாழக்கிழமை 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 4 பேருக்கும், சென்றல் நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் இருவருக்கும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இருவருக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் இருவருக்கும், இரணைமடு விமானப்படை முகாமில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House