
posted 20th February 2022
இலங்கையில் நீடித்துவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரியும், அதற்கு எதிராகவும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்று கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த கையெழுத்துப் போராட்டம் ஏற்கனவே வடமாகாணத்தின் பல பிரதேசங்களிலும் நாட்டின் தலைநகர் கொழும்பிலும் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்றதுடன், மூவின மக்களும் இப்போராட்டத்தில் பங்கு கொண்டு கையொப்பங்களை இட்டுவருகின்றனர்.
இதேவேளை இன்று காலை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும், அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான கே. ஜெயசிறிலின் ஏற்பாட்டில், காரைதீவில் குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம் தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுடன்ற உறுப்பினர் த. கலையரசன், முன்னாள் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநெத்திரன், ஞா. ஸ்ரீ நேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டக்களப்பு மேயர் தி. சரவணபவன், பிரதேச சபை உறுப்பினர் தம்பிராசா மோகனதாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகவிருந்தனர்.
காரைதீவு பொதுச்சந்தை முன்பாக இந்த கையெழுத்துப் போராட்டம் இடம் பெற்றதுடன், இன்று கல்முனை நகரிலும் இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House