
posted 13th February 2022
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திடீரென ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு சில தினங்களில் பெய்துவரும் பெருமழை, பெரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடச்சியாகப் பெய்துவரும் பெருமழை காரணமாக கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளப்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலும் தாழ்ந்த பிரதேசங்களில் பெருமழை காரணமாக மழைநீர் தேங்கி வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தாழ்ந்த பிரதேசங்களின் குடியிருப்பு வீடுகளும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.
இதேவேளை திடீர் காலநிலை சீரின்மை, பெருமழை காரணமாக கிழக்கின் நெல் உற்பத்திக்கான முக்கிய மாவட்டமான அம்பாறை மாவட்ட விவசாயிகள் கதிகலங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடை ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் திடீர் மழை தொடர்வதால் அறுவடை வேலைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசின் தூர நோக்கமற்ற திடீர் கொள்கையால் இரசாயனப் பசளையின்றி, சேதனப் பசளையைக் கொண்டே செய்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாயத்திற்குட்பட்ட விவசாயிகளின் நெற் செய்கை விளைச்சல்பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில் மழையும் தொடர்வதால் பெரும்பாதிப்பைத்தாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக விவசாயிகள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.
மழை தொடர்வதால் எகிறியிருக்கும் விலைவாசிக்கு மத்தியில் அன்றாட தொழில்கள் பலவும் பாதிப்படைந்து மக்கள் பெரும் கஷ்ட நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House