
posted 23rd February 2022
காணாமல் போன கொரொனா நோயாளி
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
காய்ச்சல் காரணமாக கடந்த 16 ஆம் திகதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்ரிஜென் பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார். மறுநாள் 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவில் திருடியவர் யாழ்ப்பாணத்தில் கைது
முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசெம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி-நெல்லியடி, ஊர்காவற்துறை பகுதிகளைச் சேர்ந்த மூவரே குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்தார்.
கோவிட் அப்டேற்
கோவிட்-19 தொற்று காரணமாக நேற்று மட்டும் 31 பேர் உயிரிழந்தனர் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 30 - 59 வயது பிரிவில் 4 ஆண்களும் 2 பெண்களுமாக ஆறு பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 ஆண்களும் 15 பெண்களுமாக 25 பேரும் என 31 பேர் உயிரிழந்தனர்.
இதனால் நாட்டில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
கட்டுவன் கசிப்புரிமையாளர் கைது
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்து வந்த இடமே இவ்வாறு தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 47 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன், 1000 லீற்றர் கோடா, 40 லீற்றர் கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைதான நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House