கஞ்சா, ஹெரோயின் நபரகள் தகவலால் கைது

கஞ்சா நபர் தகவலால் கைது

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில், 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 102 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை கைது செய்யப்பட்டார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயினுடன் ஒருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில், 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் அவரது வீட்டிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா, ஹெரோயின் நபரகள் தகவலால் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House