
posted 19th February 2022
“உயிரோடு இல்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (18) கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், “இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறும், விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்வதாகவும் தெரிவித்த நிலையில், எனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவர் மாத்திரமல்லாது எனது கண் முன்பாக மூன்று பேருந்துகளில் இராணுவத்தினர் பலரை ஏற்றி சென்றனர்.
இந்த நிலையில் நீதி அமைச்சர் எமது உறவுகள் உயிருடன் இல்லை என தெரிவித்துள்ளார். அப்படியாயின் எமது உறவுகளிற்கு என்ன நடந்தது? அவர்களை கொலை செய்துவிட்டீர்களா? இலங்கை அரசாங்கத்திடம் எமக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கோரி நிக்கின்றோம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House